Posts

Showing posts from April, 2020

போதிய அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் என்ன ஆகும்

Image
                  ஒருவர் உணவு உண்ணாமல் கூட சில வாரங்கள் உயிர் வாழலாம் . ஆனால் தண்ணீர் அருந்தாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் . உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதை விட தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம் . ஒருவருடைய பாலினம் , வயது , எடை ஆகியவற்றிற்குத் தகுந்தவாறு ஒருவர் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது கணக்கிடப் படுகிறது . சராசரியாக மனித உடலானது   50 - 70 % தண்ணீரால் ஆனது . தண்ணீர், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு மட்டும் தேவையானது அல்ல . உடல் உறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும் , உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் , தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம் . மேலும் மூட்டுகள் வலுவாக இருக்கவும் , கண்கள் தெளிவாகத் தெரியவும் , தண்ணீர் அவசியம் . உடலிலிருந்து வியர்வை , சிறுநீர் , மலம் ஆகியவை வெளியேறும் போதும் , மூச்சை வெளியிடும் போதும், உடலிலிருந்து நீர் வெளியேறுகிறது . அப்போது உடலில் வறட்சி ஏற்படும் . போதிய அளவு நீரில்லாமல் உடல் வறட...

க்ரீன் டீ பழக்கம் நல்லதா

Image
எல்லாரும் இப்போ உடம்பு குறைக்க பயன்படுத்தும் ஒரு முறை தான் இந்த க்ரீன் டீ பழக்கம். இப்பெல்லாம் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பது பேஷனாகவும் மாறி வருகிறது. டிவியில் கூட இதப் பத்தின விளம்பரங்கள் அதிகம் என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த க்ரீன் டீ பழக்கம் நல்லதா ? சிலர் நினைக்கிறார்கள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், இதய நோயைத் தடுக்கும், நமக்கு எந்த வியாதியும் வராது என்று. ஆனால், கிரீன் டீ அதிகம் குடித்தால் கல்லீரல் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பது எத்தனைபேருக்குத் தெரியும். க்ரீன் டீயில் ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக குடித்தால் அதுவும் நச்சு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறவாதீர்கள். இதிலுள்ள சில கெமிக்கல் கலவைகள் நம் உடலில் நச்சுக்களை உண்டாக்குகிறது. இந்த க்ரீன் டீயில் உள்ள காஃபைன், ப்ளூரின் மற்றும் ப்ளோனாய்டுகள் நமக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை அதிகமாக குடிக்கும் போது கல்லீரல் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் உள்ள டானின்கள் கருவில் வளரும் குழந்தையின் ...

புத்துணர்வு தரும் நீரா பானம்

Image
  தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகைப் பானம்தான் ‘நீரா’. தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது.  ‘ஒரு டம்ளர் நீராபானத்தில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 1, பி -6 மெக்னீசியம், நீர்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த நீராபானம் ஈரல் பாதிப்பு நோய்களை தடுக்கிறது, செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. மூல நோய்க்கு சிறந்த பானமாக இருக்கிறது, சிறுநீர் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் ஏற்ற பானமாக இருக்கிறது. உடல் வெப்பம் சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நீரா பானத்தை அருந்தும்போது இதன் முழுமையான மருத்துவ பயன்களை பெற முடியும். தொடர்ந்து,  இப்பானத்தை, அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும், நீரா பானத்தை அருந்தலாம். மனித உடலுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது. தோல் சுருக்கத்தை தடுக்கிறது. உடலுக்கு குளி்ர்ச்சியை அளி...