Posts

Showing posts from January, 2020

மனம் வைத்தால் மாரடைப்பைக் கூட தடுக்கலாம்

Image
நம் நாட்டில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பு நோய் தான் முக்கிய காரணம். அந்தக் காலத்தில் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு நோய் வந்தது. ஆனால், தற்போது இளம் வயதுக்காரர்களுக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. இந்த நோய் ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் தாக்குகிறது. ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின் போதும் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சக்தியையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை ரத்தக்குழாய்கள் மூலம் அனுப்புகிறது. இந்த குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு, முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் உருவாகின்றன. ஒரு சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுவதுமாக அடைத்து விடுகிறது. இதனால், இதயத்தின் தசைப்பகுதிக்கு சக்தியும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் இதயம் செயலிழக்கிறது இதுவே மாரடைப்பு ஆகும். பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.  புகைப்பிடித்தல், கெட்ட கொழுப்பு அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ளுதல், உடலின் அதிக எடை, போதைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு...

வெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்

Image
வெண்டைக்காய் உண்மையில் ஒரு சர்வரோக நிவாரணி. வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். அது ஒரு உடல் ஆரோக்கிய மருந்து. வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள். வைட்டமின் ஏ,சி,கே, பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), பி2(ரிபோப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து, குறைந்தளவு எரிசக்தி மேலும் பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோடீன், அகியவைகள் காணப்படுகின்றன. மருத்துவ பயன்கள்: வெண்டைக்காய் வாங்கும் போது அதன் நுனியை உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும். அது தான் இளமையானதாகவும், புதியதாகவும் இருக்கும். அதை நன்றாக அலசி கழுவி சமைக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்களாவது வெண்டைக்காயை சமையலில் சேர்த்து கொள்வது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லது. இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் நான்கு வெண்டைக்காயை நீட்டுவாக்கில் நான்கு பகுதியாக பிளந்து, இரவு முழுவ...

கொள்ளின் மகத்துவம்

Image
கொள்ளில் உள்ள சத்துக்கள் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து. பயன்கள் : சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், உடல் எடையை குறைக்கும், விந்தணுக்களை அதிகரிக்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும், மலச்சிக்கலைப் போக்கும், வெள்ளைப்படுதலை குணமாக்கும், கெட்ட கொழுப்பை உடலில் இருந்து நீக்கும், சருமத்தைப் பாதுகாக்கும், மாதவிடாயை ஒழுங்குபடுத்தும், பேதியை கட்டுப்படுத்தும். பயன்படுத்தும் முறைகள் கொள்ளை வேக வைத்து உண்பதால் விந்து உற்பத்தியாகும். மிளகு சேர்த்து வேகவைத்து உண்டுவர இருமல் தீரும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு பொடியும், சீரகப் பொடியும் வெந்நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும். கொள்ளை கொதிக்க வைத்து அந்த நீரைப் பருக, கழிச்சல் சரியாகும். ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் அரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து பருகிவர சிறுநீரகக் கற்கள் கரையும். கொள்ளு குடிநீருடன், சுக்குத் தூளும், பெருங்காயமும் சேர்த்து குடித்தால் செரிமான பிரச்சனை தீரும். உணவில் அதிக கொள்ளை சேர்த்துக்கொள்ள ரத்த அணுக்கள் கூடும். இரவில் கொள்ளை ஊறவைத்து காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து...

நன்றாகத் தூங்கி உங்கள் மூளையின் சிறப்பான செயல்பாட்டால் வெற்றி வாகை சூடுங்கள்

Image
நம் உடல், மனம் இரண்டையும் ஒருங்கிணைப்பதற்கு நிச்சயம் நல்ல ஆரோக்கியமான தூக்கம். தேவையான நேரம் தூங்காவிட்டால் ஏராளமான ஆரோக்கியச் சீர்கேடுகள் நம்மைத் துன்புறுத்தும். நம்மால் தீர்மானமாகச் செயல்பட முடியாது. தேவையில்லாத எரிச்சலும், அசதியும் மிஞ்சும். வேளையில் தீர்க்கமாகச் சிந்தித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது.  தினசரி சரியான நேரத்தில் தூங்கி, தேவையான அளவு ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் மறுநாள் எழுந்து அன்றாட பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்வதை ஆங்கிலத்தில் 'ஸர்காடியன் ரிதம் (Circadian Rhythm) என்பார்கள்.   கீழ் குறிப்பிட்டுள்ள சில சுலபமான செயல்களை தினமும் செய்வதின் மூலம் மருந்தோ / மதுவோ இல்லாமல் நம்மால் நன்றாகத் தூங்கி இந்த 'ஸர்காடியன் ரிதம்' என்ற மிக முக்கியமான இசைவை நிகழ்த்த முடியும். தூங்கும் இடம் கும்மிருட்டாக இருக்க வேண்டும் தூங்கும் முன் மொபைல் போன் / லேப்டாப்  போன்ற  எந்தவிதமான  எலெக்ட்ரானிக் உபகரணத்தையும் உபயோகிக்க வேண்டாம். இவற்றிலிருந்து வரும் வெளிச்சம் நம்முடலில் மெலடோனின் (Melatonin) என்ற ஹார்மோன் உற்பத்தியாவதற்கு இடைஞ்சலாக இருக்கும...

இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை/ தீமை....... 

Image
  இரவு உணவுக்குப் பின் பெரும்பாலானோர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆகும், காலைக்கடன் எந்த சிரமமும் இல்லாமல் கழியும் என்பதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும், பெரும்பாலானோருக்கு உடலில் உள்ள கலோரிகளை அதிகமாக்கி , உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதற்கு முக்கியகாரணம் வாழைபழத்தில் உள்ள பிரக்டோஸ் (Fructose) என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கிவிடுவது தான்.  யாரெல்லாம் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடலாம்: வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படவும...

ஒரு நிமிட யோகா பகுதி 2

Image
-வெ. கண்ணன், அலைபேசி: 94443 39976 தொடர் – 2   ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.           -குறள் (131) ஒருவனுக்கு என்றும் நீங்காத மேன்மையைத் தர வல்லது நல்லொழுக்கமேயாகும். எனவே அவ்வொழுக்கத்தைத் தன் உயிரை விட மேலாக மதித்து கடைபிடிக்க வேண்டும். இந்த பிரத்யாஹாரப்  பயிற்சி உங்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிக்க உதவியாக இருக்கும். அதாவது (கட்டை) பெருவிரல்களை காதுகளுக்குள் வைத்து இன்றைய தினம் தேவையில்லாத, புண்படுத்தக் கூடிய சொற்களை கேட்கமாட்டேன். அதையும் மீறி என் காதில் ஏதேனும் கேட்டாலும் அதை மிகைப்படுத்த  மாட்டேன் என்று மனதில் சொல்லிக் கொள்ள  வேண்டும். மேலும் ஆள்காட்டி விரல்கள் மற்றும் நடுவிரல்களால் கண்களை மூடி இன்றைய தினம் தேவையில்லாத காட்சிகளை பார்க்கமாட்டேன், அதையும் மீறி பார்த்தாலும் அதை .மிகைப்படுத்தி அதற்கு அடிமையாக மாட்டேன் என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இரவு சீக்கிரமாக படுக்கைக்குச் சென்று கண்களுக்கு ஓய்வு கொடுப்பது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண...

நன்மைகள் பல தரும் நல்லெண்ணெய்

Image
எள் என்பது உலகின் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு  வகை தானியம். பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட எள் தானியங்களை பயன்படுத்தி பல உணவு வகைகள் தயார் செய்து உண்ணப்படுகின்றன. அந்த எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் நல்லெண்ணெய் எனப்படுகிறது. உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இந்த நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதாலும் அந்த நல்லெண்ணெய்யை மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் வேறு பல மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். தோல் நோய்கள் குணமாக நமது உடலை காக்கும் கவசமாக வெளிப்புற தோல் இருக்கிறது. வெளிப்புற தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு எண்ணெய் வகையாக நல்லெண்ணெய் இருக்கிறது. நல்லெண்ணெயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. இந்த ஜிங்க் சத்து நமது தோலில் ஜவ்வு தன்மையை நீடிக்கச் செய்து , மிருதுவான தோல் ஏற்பட செய்கிறது. முதுமை காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்கள் , தழும்புகள் போன்றவற்றை நீக்குகிறது. கோடைக்காலங்களில் நல்லெண்ணெயை சிறிது எடுத்து கைகளில் மேற்புறமாக சிறிது தடவிக் கொள்...

ஒரு நிமிட யோகா

Image
பகுதி - 1 வெ. கண்ணன், அலைபேசி: 94443 39976                ஒரு நிமிடத்தில் யோகாவா? இது சாத்தியமா? என்ற வினா எழுவதில்  வியப்பொன்றுமில்லை. அன்றைய தினம் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபட்டதனால் மக்கள் உடல் பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்கவில்லை என்றாலும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடின உழைப்பற்ற வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். நம் சந்ததியினருக்கும் அதையே கொடுக்க ஆசைப்படுகிறோம். ஆனால் உடல் நலத்துடன் வாழ சிறிதளவாவது உடல்- மனப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் அறிந்திருந்தாலும், காலை பரபரப்பான நேரத்தில் அதற்கெல்லாம் நேரம் இல்லை எனக் கூறி தன்  சோம்பேறித்தனத்தால் அதை தவிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் கண்டதை தின்று, கண்டபடி வாழ்ந்து, உடல் பெருத்து, நோய்வாய்ப் படும்போது நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் என்று தேடி அலைகிறார்கள். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு அங்கு சென்று பயிற்சி செய்து பின்பு அதையும்  நிறுத்தி விடுகிறார்கள்.  எதையுமே தினசரி செய்யாவிட்டால் முழுப்பலன் கிடைக்காது. எனவே தினசரி செயல்களான ப...

அழகு பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய்

Image
உடல் வெப்பத்தைத் தணிக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனால் தேங்காய் எண்ணெய்யை வைத்து அழகையும் பராமரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் !!! மாய்ஸ்சரைஸர் :   வறண்ட சருமம் இருப்போர் தேங்காய் எண்ணெய்யை முகம், கை கால்களில் தடவிக் கொள்வதால் சருமம் வெடிக்காது.   சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் : கை கால்களில் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்தால் சூரிய வெளிச்சம் நேரடியாக படாது. அதேசமயம் ஈரப்பதத்தையும் அளிக்கும்.   கண்களுக்கான கிரீம் :  கண்களுக்குக் கீழ் கருமை, வீக்கம் என அழகைக் கெடுக்கும் வகையிலான பிரச்னைகளுக்கு ஒரு துளி தேங்காய் எண்ணெயை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும்.   மேக்அப் ரிமூவர் :   தினமும் மேக் அப் அப்ளை செய்கிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணெயை காட்டனில் முக்கி, ரிமூவ் பண்ணலாம்.   ஃபேஸ் மாஸ்க் :   தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது பேக்கிங் சோடா ஏதேனும் ஒன்றை கலந்து நன்குக் கலக்கி முகத்தில் தேய்த்து 7 – 10 நிம...

ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா

Image
- M. ஞானசேகர்,  Mob: 95662 53929 இன்று எங்கு பார்த்தாலும் நோய்கள், விபத்துக்கள், சுத்தமின்மை என மக்கள் வருந்தும் சூழ்நிலை உள்ளது. மக்கள் தொகையும் அதிகமாகி வரும் இச்சூழலில், அனைவரும் விரும்புவது நோயற்ற, ஆரோக்கியமான, இளமையான, நீண்ட நாள் வாழ்க்கை, அதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம். உணவு : உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு, நமது உணவை 3 பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம், மற்றொரு பாகம் காய்கறிகள், இன்னோரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். அதற்காக நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. உடற்பயிற்சி : வீட்டில் இருந்தபடியே செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதல், இரண்டு நாள் செய்வதற்கு தயக்கமாக இருக்கும். இரண்டு, மூன்று நாட்களை தாண்டி விட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை  இருக்கமாக்குகிறது. ...

கை கால்கள் மரத்துபோவது ஏன்

Image
நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம். அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் இரத்த ஓட்டங்கள் தடைபடுவதன் காரணமாக இந்த (Numbness Symptoms) மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை, இன்னும் பல காரணங்களும் இருக்கிறது. அடிக்கடி கை , கால் மரத்து போவதன் காரணங்கள்..! உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல, இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும். ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம். ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும்...

மஞ்சள் தூள் மகத்துவம்

Image
மஞ்சள் தூள் மகத்துவம் மஞ்சள் தூளை தினமும் சமையலில் கட்டாயமாக சிறிதளவு சேர்க்க வேண்டும். இது கிருமி நாசினியாக செயல்பட்டு, உடலில் வரும் நோயை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது. இருமல், சளியை சரி செய்யக்கூடியது. தினமும் பாலில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து பருகினால் எல்லா வியாதிகளுக்கும் மருந்தாகக் கூடியது. குழந்தைகளுக்கு, பிறந்தவுடன் உடம்பில் பூலாங்கிழங்கு, மஞ்சள் தூள் தேய்த்து குளிக்க வைத்தால் பிணிகள் அண்டாது. பருவம் வந்த பெண்களுக்கு முகத்தில் அதிக கேசம் தெரிந்தால் மஞ்சள் தேய்த்து குளித்துவர சிறிது நாட்களில் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து வாசலில் தெளிப்பது எதற்காக தெரியுமா? பொதுவாக பூச்சிகளுக்கு மஞ்சள்  வாசனை  என்றால் அலர்ஜி. தவிர திருஷ்டிக்கு என்றும் கூறுவது வழக்கம். நம் முன்னோர்கள், எல்லாம் அறிவியலோடு சேர்த்து சடங்கு சம்பிரதாயங்களை கண்டுபிடித்து வைத்தார்கள், நாம் அதைப் பின்பற்றி வருகிறோம்.  தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தொடர்ந்து மஞ்சள் தூள் தேய்த்து வந்தால், சாதாரணமாக உள்ள அரிப்புகளும் ஆரம்ப நிலையிலேயே சரியாகிவிடும். வெயில் காலங்களில் வரும...