Posts

Showing posts from December, 2019

உடலில் உப்புச்சத்து கூடிவிட்டதா சோளம் சாப்பிடுங்கள்

Image
எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ள சோளம் மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (Genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டாகரோட்டீன், புற்றுநோயை தடுக்கும்பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது. சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன்செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. எனினும் மூல நோயாளிகள் சோள உணவை தவிர்ப்ப து நலம். சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு உணவாக சோள ரொட்டியை எடுத்து வருவதன் மூலம், அவர்களது சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. .                        ...

சென்னை ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தந்தைக்கு கல்லீரலை தானம் கொடுத்த மகள்

Image
-டாக்டர்கள் குழுவுக்கு முதல்வர் பாராட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தைக்கு தனது ஒரு பகுதி கல்லீரலை மகள் தானமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து சென்னை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் முருகன்(48). கல்லீரல் செயலிழந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் கிடைக்கும் கல்லீரலுக்காகக் காத்திருந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவருக்கு, அவரது 19 வயது மகள் நிவேதா தனது ஒரு பகுதி கல்லீரலை தானம் கொடுக்க முன்வந்தார். இதையடுத்து, டாக்டர்கள் குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோப்பி) மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து, தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தினர். தற்போது இருவரும் நலமாக உள்ள னர். இதையடுத்து, டாக்டர்கள் குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோப்பி) மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து, தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தினர். தற்போது இருவரும் நலமாக உள்ள னர்...